அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 04, 2015

துருப் பிடித்த இதயங்களைத் துலக்கவது எப்படி...?

 துருப் துருப் பிடித்த இதயங்களைத் துலக்குவது எப்படி..? அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
மனித நேயம் செத்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு இப்பொழுது எங்குப் பார்த்தாலும் நடக்கும் காட்சிகள் பார்க்கும்போது அப்படி தோன்றுகிறது.

சாலையோரத்தில் பிணமாகக் கிடக்கும் அந்த மூதாட்டிக்கு என்ன வயதிருக்கும்? எழுபது, எழுபத்தைந்து இருக்குமா? தன் வாழ்க்கை பற்றியோ, தன் வாழ்வில் படிந்துவிட்ட நிலையான வறுமை பற்றியோ இனி கவலைப்படுவதற்கு அவளிடம் உயிர் இல்லை. பாவம்! யாரும் இல்லாத அநாதை போலிருக்கிறது. வெகுநேரமாக அவளுடைய பிணம் அப்படியே கிடக்கிறது. பரபரப்பான அந்தச் சாலையில் நிமிடத்திற்கு நூறு பேர் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். போனால் போகிறதென்று ஓர் அனுதாபப் பார்வையை மட்டும் அந்தப் பிணத்தின் மீது வீசிவிட்டுப் போய்கொண்டே இருக்கிறார்கள். யாரும் அருகில் கூட வரவில்லை .