பெற்றோர்கள் அவசியம் படிக்கவும் |
பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள்.. ''ஒரு தந்தை தமது பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் சிறந்தது ஒழுக்கத்தைவிட மேலான அன்பளிப்பு இல்லை. '' ஆதாரம்.. திர்மிதி]
குழந்தை பாக்கியம்
மனிதன் தான் பெற்ற சொத்து, சுகங்களில் குழந்தை பாக்கியம் தான் பெரும் பாக்கியம். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் அல்லாஹ்வின் அருட்பாக்கியத்தை எண்ணி அகம் குளிர்ந்து, '' இரட்சகா! நீ எனக்கு ஒரு குழந்தையை ஈந்து உகந்து, அதை வளர்த்து உனக்கு சிரம் பணியும் நல்லடியாராக ஆளாக்க அருள்புரிந்தாயே, உனக்கே ஆயிரம் கோடி நன்றி'' என புகழ்பாட வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.