அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள்

பாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் 
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நமக்கு ஏற்படுகின்ற சிக்கல்கள், தொல்லைகள், நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படைக்  காரணங்கள் நம் கைகளால் நாம் தேடிக்  கொள்ளும் பாவங்களேயாகும். நம்முடைய இன்னல்கள் அகல வேண்டுமெனில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் [தௌபா செய்தல்] அவசியம் ஆகும்.

''நான் பாவச்  செயல்களை இனியும் செய்ய மாட்டேன்'' என்பதாக அழுது  கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரினால், அவன் மன்னிக்கப் போதுமானவன். நம்முடைய இத்தாழச்சியான, பணிவான வேண்டுதலால் இறைவனின் சினம் நீங்குகிறது. அவனின் அன்பு நம் மீது பொழிகின்றது.