அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒரு முஸ்லிம் நேசிப்பார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு முஸ்லிம் நேசிப்பார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 27, 2016

ஒரு முஸ்லிம் நேசிப்பார், நேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்]

ஒரு முஸ்லிம் நேசிப்பார், நேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
மார்க்க நேர்வழியின் பிரகாசத்தைப் பெற்றுள்ள முஸ்லிம் மென்மையானவராகவும், நேசிப்பவராகவும், நேசத்திற்கு உரியவராகவும் இருப்பார். அவர் பிறரை நேசித்து இணைந்திருந்து அவர்களிடம் அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவார். பிறரும் அவரை நேசித்து அவருடன் நல்லுறவு கொண்டு அவர் மீது அன்பையும் பரிவையும்  வெளிப்படுத்துவார்கள். இதுதான் தனது மார்க்கத்தின் தூதுத்துவத்தைப் பேணி வரும் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பின் தனித் தன்மையாகும். சமூகத்தில் மக்களுடன் இணைந்து அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருப்பது  முஸ்லிமின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அதுவே அம்மக்களை சத்திய வார்த்தையையும் அதன் மேலான மாண்புகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான உறுதியான வழிமுறையாகும்.