அல்லாஹ்வின் திருபெயரால் .......
''தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மௌனமாக இருப்பதே ஆகும் ' எட்மண்ட் பர்க்
''உண்மையை அறிந்த பின்னரும் , உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள் '' மார்டின் லூதர் கிங்
இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன . ஆனால் , இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ , மற்றவர்கள் தங்களுக்காக குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் . பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே , பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராக பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் , அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுபினால்தான் , நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதைச் சமூகம் மறந்துவிடக் கூடாது.