அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 11, 2017

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் ....

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் ....
மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்கள் நாம் வேலை செய்யும் அலுவலகம், கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள், காய்கறிகடைள், ரயில் நிலையங்கள்,திருமண மண்டபங்கள்,இப்படி பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இங்கே நம்மை போல் பலரும் வருவார்கள். இவ்வாறு கூட்டமாக சேருமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
புறப்படும் போது
முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் போகும் இடங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வை பொறுப்பாளனாக்கி செல்வதே சிறந்தாகும்.
நபி(ஸல்)அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துஆச் செய்து செல்வார்கள்.