அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
துஆ கேட்கும் முறை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துஆ கேட்கும் முறை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 10, 2016

துஆ கேட்கும் முறை.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

[விசுவாசிகளே!] நீங்கள் உங்கள் இறைவனிடமே மிகப் பணிவாகவும் அந்தரங்கமாகவும் [வேண்டியதைக் கோரி] பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் [பிரார்த்தனை செய்யாததின் மூலம்] வரம்பு மீறியவர்களை  விரும்புவதில்லை''.
அல்குர்ஆன் .. 7..55]

மேலும், வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்..  ''[நபியே!] உம்முடைய மனத்திற்குள்ளாகவே மிக்க தாழ்மையுடன், பயபக்தியோடு உரத்தக் குரலின்றி [மெது மெதுவாக] காலையிலும் மாலையிலும் உமது இறைவனை [பிரார்த்தித்து] துதி செய்து வருவீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிட வேண்டாம்.
அல்குர்ஆன்.. 7..205]

தளர்ரு  அன் -வகுஃயா - தாழ்மையாகவும் மெதுவான குரலிலும்'' எனபது இவற்றின் பொருளாகும். அல்லாஹ்விடம் அடியான் இறைஞ்சிடும் பொழுது அவன் தனது பணிவையும், இயலாமையையும் வெளிப்படுத்தி உள்ளச்சத்துடனும் பயபக்த்தியுடனும் துஆ இறைஞ்ச வேண்டும் என்பதே மேற்காணும் சொற்களுக்குரிய விளக்கமாகும்.