அல்லாஹ்வின் திருப்பெயரால்....
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இவ்வுலகில் மனிதன் பல தருணங்களில் அழுகின்றான். கணவர், மனைவி, தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள் போன்ற உறவுகள் துண்டிக்கப்பட்டால் அழுகின்றனர். அதேப்போன்று தான் செய்கின்ற வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் அதற்காகவும், பொருளாதார மோசடி போன்றவைக்கும் அழுகிறான். மேலும், வயதில் சிலர் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலோ, தனக்கு ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டாலோ இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானாலோ, உணர்ச்சிவசப்படும் போதோ போன்ற பல்வேறு தருணங்களில் கண்ணீர் வடிக்கின்றான்.
அதிலும் சிலர் சந்தோசம் அடைந்தாலோ ஆனந்த கண்ணீர் வடிக்கின்றான். ஆனால், நாம் அழுகின்ற அழுகை அல்லாஹ்விற்காக எத்தனை பேர் அழுது இறுக்கின்றோம். அல்லாஹ்விற்காக அழுத கண்கள் என்ற தலைப்பில் இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.