அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
தவ்பாச் செய்து மீளுதல் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவ்பாச் செய்து மீளுதல் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

தவ்பாச் செய்து மீளுதல் ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தவ்பாச்  செய்து மீளுதல் ...

அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவ்பா - பாவமீட்சி பெறுவது அவசியமாகும் என மார்க்க மேதைகள் கூறுகிறார்கள்.

மனிதர்களின் உரிமைகள் சம்மந்தப்படாது, அல்லாஹு தஆலாவின்  கட்டளைகள் விஷயத்தில் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் , அவர் அதனை விட்டுத் தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகள் உள்ளன. 1] தாம் இதுவரை செய்து வந்த பாவத்தைவிட்டு முற்றிலும் நீங்கி விடுவது [2] தமது பாவம் குறித்து உண்மையில் வருந்திக் கைசேதமுறுவது [3] இனிமேல் எப்பொழுதும் அப்பாவத்தைச் செய்வதில்லை என உறுதி பூணுவது.