அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அறிவு ஞானத்தின் சிறப்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவு ஞானத்தின் சிறப்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

அந்த ஆறு குணங்கள் *********

மீஸான் தராசை கணப்படுத்துவது
நற்குணமே!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......

இஸ்லாம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்த நேரம்  அது. அவ்வேளை  '' ஏமன்  தேசத்திற்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக உங்களில் யார் தயார்? '' என விந்தை நபி வினவியபோது,  அச்சபையில் வீற்றிருந்த அபூபக்கர் [ரலி] அவர்கள், '' நான் தயார்'' என்று முன்வந்தபோது, ஏனோ தெரியவில்லை, மாநபி [ஸல்] அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

புதன், மே 13, 2015

இனிக்கும் நுனி நாக்கு !

அல்லாஹ்வின் திருபெயரால் ..............
இந்த உலகம் ஒரு மாய உலகம் . ஒவ்வொரு விடயமும் மாயமாகத்தான் இருக்கிறது. மாயமான உலகத்தில் , மனிதன் மயங்கி போய்விட்டான் . மாயக்காரன் ஷைத்தான் மயக்கிவிட்டான். இன்னும் மனிதன் மயக்கத்தில் தான் இருக்கிறான். அவனின் புறக் கண்கள் திறந்திருக்கின்றன. ஆனால் , அவனின் அகக் கண்கள் முடியிருகின்றன.

மனிதன் பறவைகளைப் போன்று விண்  முட்டப் பறக்கக் கற்றுக் கொண்டான். மீன்களைப் போன்று ஆழ்கடலில் நீந்தத் தெரிந்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு எதிரிலுள்ள மனித மனதுள் தோன்றும் எண்ண  ஓட்டங்களை மட்டும், அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஆழம் காண முடியாத பாதாளமாக அவனுக்குத் தோன்றுகிறது.

செவ்வாய், மே 05, 2015

உணர்வாய் உன்னை !


உணர்வாய் உன்னை !
சகோதரர் ஜலாலுத்தீன்.
உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப்
பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின்
பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும்,
இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:
அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு
கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும்
அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும்
ஆழமானதா?

திங்கள், பிப்ரவரி 16, 2015

இறையருளைப் பெறும் வழிகள்




அருள் புரியக் கூடியவன் அல்லாஹ். அவனால் மட்டுமே அதைச் சாத்தியப்
படுத்தலாம். அல்லாஹ்வின் அருள் பல்வேறுபட்ட வடிவங்களில் எம்மை
வந்தடைகின்றது. அவற்றில் இலகுவாகப் பெற முடியுமானவற்றைப் பெறுவதற்கான
முயற்சிகளில் மட்டுமே நாம் முனைப்புடன் செயல்படுகிறோம்.
அவற்றில் அல்லாஹ்விடம் வாயினால் கேட்டுப் பெறும் முறையும் ஒன்றாகும்.
அல்லாஹும்மர் ஹம்னா (இறைவா எங்களுக்கு அருள் புரிவாயாக) என்பது அதற்கு
ஓர் உதாரணமாகும். ரமழான் மாத ஆரம்பப் பத்துத் தினங்களிலும் அதை நாம்
பெறுவதற்காக நாவைப் பயன்படுத்துகின்றோம்.

திங்கள், டிசம்பர் 29, 2014

நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம்


அல்லாஹ்வின் திருபெயரால் ........

இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”.

சனி, மே 24, 2014

அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி [ஸல்] அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சிரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார் . அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.''

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

இப்போதே கற்றுக்கொடுங்கள்




அல்லாஹ்வின் திருபெயரால் ...
"என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே ! நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்."
அல்குர் ஆன் :31-13

திங்கள், ஜூன் 03, 2013

அறிவு ஞானத்தின் சிறப்பு!

அறிவு ஞானத்தின் சிறப்பு!


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

(நபியே)நீர் கூறுவீராக !என் இரட்சகனே!எனக்கு அறிவு ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!
அறிபவர்களும் அறியாதவர்களும் சமமாவார்கள் ? என (நபியே) நீர் கேளும் .
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் ,அறிவு ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு அந்தஸ்துகளை அல்லாஹ்  உயர்த்துவான் .
அல்லாஹ்வை அவனின் அடியாகளில் அஞ்சுவதெல்லாம் உலமாக்கள் (அறிவாளிகள்) தாம்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்: யாருக்கு அல்லாஹ்  நலவை நாடுகிறானோ அவரை தீனின் (சன்மார்க்கத்தில்)அறிஞராக  ஆக்குகிறான். (புகாரி,முஸ்லிம்)

ஹஜ்ரத் சஹ்ல் பின் ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள் .அல்லாஹ்வின் மீது ஆணையாக !அல்லாஹ் உம்மைக் கொண்டு ஒருவருக்கு நேர்வழி காட்டுவது ,சிவந்தத ஒட்டகைகள் (உமக்குக்)கிடைப்பதை விடச் சிறந்ததாகும் எனப்பகர்ந்தார்கள் .(புகாரி,முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: என்னைப் பற்றி ஒரு செய்தியாக இருந்தாலும் மக்களுக்கு எத்தி வையுங்கள்.பனூஇஸ்ராயீல்கள் கூறும் செய்திகளை அறிவியுங்கள் .அதைப்பற்றி பரவாஇல்லை  .எவர் என்மீது வேண்டுமென்றே பொய் கூறுகிறாரோ அவர் தம் இருப்பிடத்தை  நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் .(புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : யார் அறிவு ஞானத்தை தேடும் பாதையில் நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இலேசாக்கி வைக்கிறான். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் நேர்வழியின் பக்கம் அழைக்கிறாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்ற கூடியவர்களின்  நற்கூளிகளைப் போன்றவை கிடைக்கும்.அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில்  எதுவும் குறையாது. (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :ஆதமின் மகன் மரணித்துவிட்டால்  மூன்றைத் தவிர அவனின் அமல்கள் (அனைத்தும்) துண்டித்துவிடும்(தொடர்ந்து நன்மை தரக்கூடிய மூன்று அமல்கலாகிறது) 1.ஸதக்கத்துன் ஜாரியா --தொடர்ந்து நடைபெற்று வரும் தர்மம்  2. பயன்வழங்கும் கல்வி 3. அவருக்காக துஆச் செய்யும் அவரின் நல்லபிள்ளை  .  (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவில தான் செவிமடுத்ததாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்: நம்மிடமிருந்து சில செய்திகளைக் கேட்டு,தான் கேட்டவாறே மற்றவர்களுக்கு எத்திவைத்துவிட்ட மனிதருக்கு அல்லாஹ்  செழிசெழிப்பை  அருள்வானாக .எத்தனையோ செய்தி எத்திவைக்கப்பட்டவர்கள். கேட்பவர்களைவிட அதனை மிகப் பாதுகாப்பார்கள்.
          (திர்மிதி)

இஸ்லாத்தின் கல்வியை கற்பது ,ஆண் ,பெண் மீது கடமை . ஒரு அமல் செய்ய நாடினால்  ,அதனின் கல்வி அவசியம் (அதாவது ஒருவர் தொழ வேண்டும் என்றால்  அவர் அவசியம் தொழுகைப் பற்றி ,ஒழு எப்படி செய்யணும் என்பதை பற்றி அறிய வேண்டும்! ) இஸ்லாத்தில் உள்ள கடமைகள் ,அவைகள் அனைத்துக்கும்  கல்வி அவசியம் ! உலக கல்வியை மட்டும் இலக்காக நாம் கற்று வந்தால் ,அது நமக்கு பலன் தரும் அல்லது தராது( அது இந்த உலகத்தில் முடிவு பெற்று விடும் ) அல்லாஹ் நமக்கு விதித்ததை தவிர எதுவும் நமக்கு கிடைக்காது . உலக கல்வி அவசியம் என்பது எல்லோரும் அறிந்த விடயம் தான் ! இஸ்லாமும்  அதை தடுக்கவும் இல்லை ,இருபினும் மார்க்க கல்வி ரொம்ப ரொம்ப அவசியம்  என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும் ! இன்று மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை  என்று எல்லோரும்  அறிந்த விஷயம் தான்  , மார்க்க கல்வி இல்லாத சில பேர் , அறியாமையிலும் ,மூடநம்பிக்கையிலும்,  பித் அத் ,நூதன செயல்களில் வீழ்வதை நாம் பார்க்கிறோம்  அவைகளை விட்டு விலக வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் மார்க்க கல்வி கற்பது அவசியம் ! அல்லாஹ் நம் அனைவரையும் அறிவாளிகள் கூட்டத்தில் ஆக்கி வைப்பானாக ! ஆமீன் .............-