அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அடங்கும் நாள் ஒன்று வருமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடங்கும் நாள் ஒன்று வருமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

மறுமையின் முதல் நிலை மண்ணறை.!

 மறுமையின் முதல் நிலை மண்ணறை.!


மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.


மண்ணறை வேதனை


“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)”


(அல்-குர்ஆன் 40:46)

செவ்வாய், ஜூன் 23, 2020

மறுமையின் கேள்விக் கணக்கிலிருந்து தப்ப முடியாது!

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெற்றோர்களே! ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்துதான் ஆகவேண்டும்! '' நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்! உங்களுடைய பொருப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறந்துவிட முடியாது. குழந்தைகள் பருவ வயதை அடையும் வரை அல்லாஹ் -ரசூலை பற்றியும் , இஸ்லாத்தின் பர்ளு ஈமானின் விளக்கம், தொழுகை முறை, நோன்பு வைக்கும் விதம் எல்லாம் கற்றுக்கொடுத்து எப்படி எல்லாம் ''அமல் செய்ய வைத்திருக்கிறோம் என்பது பற்றி நிச்சயமாக கேட்கப்படுவோம் . வயிற்று பிரச்சனை தீராததால் மார்க்கப் பிரச்சனை பற்றிச் சிந்திக்க நேரம் இல்லை எனச் சொல்லி விசாரணையிலிருந்து தப்ப முடியாது. குழந்தைகளை சிறுவயதிலேயே தொழுகை, நோன்பு போன்ற காரியங்களில் பழக்கப்  படுத்த வேண்டும்! அவர்களுடைய வயதில் செய்து கொள்வார்கள்' என்று தப்பான கருத்தில் அலட்சியமாக இருப்பவர்கள், ((ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? '' என்ற பழமொழியைக் கேள்விப்  பட்டதில்லையா? 

வெள்ளி, பிப்ரவரி 21, 2020

நீங்கள் தோன்றியபோது நிகழ்ந்த அதிசயங்கள்!


இது  நீண்ட கட்டுரை , ஒரு அருமையான கட்டுரை .எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை. படியுங்கள், உங்கள் கருத்தை பதியுங்கள்!
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள்  தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்...கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?

சனி, பிப்ரவரி 15, 2020

ஆடி ,ஓடித் திரிந்தாலும் , அடங்கும் நாள் ஒன்று வருமே!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நிரந்தரமில்லாத, அற்பமான ,சொற்பமான வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கி விடுகிறோம். 50 அல்லது 70 ஆண்டு வாழ்வுப்  பயணத்தை, 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது 'நம்பிக்கை ' இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பமான ஆரம்ப நிலையையும் , இறுதியான மரணத் தருவாயையும் மறந்துவிட்டு, மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.பொய், புரட்டு, பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம் போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான்.உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி, பாவத்தில் மூழ்கும் போது  வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.  ஏன் இந்த சூழ்நிலை?!⏳👈☝

ஞாயிறு, ஜூலை 10, 2016

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

நிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட  எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம். 50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது  ''தவக்கல் ' [நம்பிக்கை] இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பகான  ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத்  தருவாயையும் மறந்து விட்டு , மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம். பொய் , புரட்டு பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி  விடுகிறது. ஏன்  இந்த இழிநிலை?!