வியாழன், நவம்பர் 30, 2017

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!

தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான்.

செவ்வாய், நவம்பர் 28, 2017

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

சனி, நவம்பர் 25, 2017

அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து, இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக!
(பார்க்க அல்குர்ஆன்: 96:1)

இந்தச் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும், முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.

இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

மக்களில் பெரும்பாலானவர்கள் உங்களின் இறைநம்பிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையோ, அல்லது உங்கள் வணக்க வழிபாடுகள் எப்படி என்பதையோ பார்க்கமாட்டார்கள். மாறாக, உங்கள் குணநலன்களையே கவனிப்பார்கள். உங்களின் பண்புகள் சிறந்தவையாக இருந்தால், உங்களின் இறைநம்பிக்கையின் மூலமும் கல்வியின் மூலமும் மக்கள் பலனடைவார்கள். உங்களின் வணக்க வழிபாடுகளையும் குணநலன்களையும் பின்பற்றுவார்கள். ஆனால் உங்களிடம் நற்பண்புகள் குறைவாக இருந்தால், உங்களின் கல்வியறிவு எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே நற்பண்களைக் கைக்கொள்வது எல்லா முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

வெள்ளி, நவம்பர் 24, 2017

ஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள்

ஜும்ஆ நாள்
நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் [இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவேண்டிய அவசியமான கட்டுரை. ]
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி 450