திங்கள், ஆகஸ்ட் 14, 2017

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மலருக்கு மனம் அழகு ! மங்கைக்கு நாணம் அழகு! மொழிக்கு உவமை அழகு!
உவமைகள் இல்லாத மொழி ஊமை மொழி  என்று துணிந்து சொல்லி விடலாம்..

தமிழைத் போலவே அரபியும் தொன்மையான மொழிகளில் ஒன்று .

இறைத்தூதர் கூறிய இனிய உவமைகள் இரண்டை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.
 இந்த உலகில் தாம் இறைத்தூதராய் அனுப்பப்பட்டதின் நோக்கம் குறித்தும் தம்முடைய பணி எத்தகையது  என்பதையும் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்  பாருங்கள்!

சனி, ஆகஸ்ட் 12, 2017

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!
அன்பு சகோதரிகளே!
இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது.
சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த வரை அவர்தான் நமக்கு எல்லாமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நம்ம பெண்களில் பல பேர் கணவன்மாரை கணக்கெடுப்பதே இல்லை. சில வீடுகளிலே கணவன் அடிமையை போல இருபான். பொண்டாட்டியின் சத்தம்தான் புருசனின் சத்தத்தை விட அதிகாமா இருக்கும். சில பொண்டாட்டிமார் புரிசண்ட முகத்திலே ஏசுகின்றார்கள் “ஒன்ன சும்மாவா கலியாணம் முடிச்ச. 8, 10 ஏக்கர் காணியும் இந்தப்பெரிய வீடும் போதாக்குறைக்கு கடையையும் தந்துதான் கலியாணம் முடிச்ச. இது ஒண்டும் இல்லன்டா நீ முடிச்சிருப்பியா” ண்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கணவனின் முன்னாலே கேட்கின்றார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

நபி [ஸல்] அவர்கள் அருளியதை  ஹஜ்ரத் முஸ்தவரிதுப்னு  ஷத்தாத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. '' அல்லாஹுத்தஆலாவின் மீது ஆணையாக ! மறுமைக்கு முன் உலகின் உதாரணம் . உங்களில் ஒருவர் தன் விரலைக் கடலில் முக்கியெடுத்துப் பிறகு தன் விரலில் எவ்வளவு நீர் ஒட்டிக் கொண்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளவும் !'' அதாவது கடலில் இருக்கும் நீரை கவனிக்கும் பட்சத்தில் விரலில் ஒட்டியுள்ள நீர் எவ்வாறு மிகக் குறைவானதோ அவ்வாறே மறுமையை கவனிக்கும் பட்சத்தில் உலக வாழ்க்கை மிகக் குறைவானது .
நூல்-முஸ்லிம்]

ஞாயிறு, ஜூலை 30, 2017

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

உஷ்ணத்தின் உச்சக்கட்டம் கிழக்கு ஊரெல்லாம் பேசப்படுகிறது. காலை ஆறு மணிக்கே வியர்வை சொட்ட ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மிக மோசம்தான். மின் விசிறியும் இல்லையெனில் மனிதனின் நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிடுமளவுக்கு சூரியன் அதன் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

சூட்டின் தாக்கம் பலரையும் பல விதமான வியாதிக்குள் சிக்கவைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வைக்கூரு வீறு நடை போடுகிறது. சிலரைக் காய்ச்சலும், வாந்திபேதியும் வாட்டிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை சின்னமுத்து எனும் அம்மை போன்ற நோய் அதட்டிக்கொண்டிருக்கிறது. சிலருக்குக் காலையில் 10 நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தால் மயக்கம் ஏற்படுகின்ற அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சனி, ஜூலை 29, 2017

தொழுகையை விட்டவன்



தொழுகையை விட்டவன்  

    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

    தொழுகையை விட்ட என் சகோதரனே ! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.