கனவின் பலன் (2)
கனவுகள் : பலன்கள் :
அரசரைக் காணுதல் : உங்களிடமுள்ள செல்வம் மேன்மேலும் பொழிக்கும் கௌரவம் உண்டாவதுடன் அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.
அரசர் முகம் காணுதல்: உங்களுடைய அந்தஸ்தும் கௌரவமும் உயரும் அதிகாரம் கிடைக்கும்.
அரசரைச் சந்தித்தல்: அரசாங்கத்தால் உதவியும் பயனும் பெறுவீர்கள் !
அரசர் சிரிக்கக் கண்டால் : கௌரவமும் மரியாதையும் ஏற்படும் சந்தோசம் பெருகும்.
அரசர் தகாத இடத்தில் இறங்குதல் : பிரஸ்தாப இடத்தில் திடிரென அபாயங்கள் நேரிடும் அங்குள்ள விவசாயம் நாசமாகும்.
அரசருடன் உணவுருந்துதல் : வயது அதிகமாகும் . ஆயுள் வளரும் , தேக ஆரோக்கியம் பெருகும் வியாபாரத்திலும் தொழிலும் முன்னேற்றம் கிடைக்கும்.
அரசர் கோபமாயிருக்கக் காணுதல் : எதிர்பாராத நஷ்ட்டங்கள் பல ஏற்படும் .அச்சத்தால் மனக் கலக்கம் உண்டாகும்.
அடிமையை விற்கக் காணுதல்: இது துக்கத்தின் அறிகுறியாகும் .இரவும்,பகலும் மனக் குழப்பம் இருக்கும்.
அரசருடன் சண்டை : அதிகமான சுகம் குறையும்.
அழகிய கிழவி : வசிக்கும் வீடு அழகாகவும் , உணவு அதிகம் கிடைக்கும்.
அடுப்பு : ஒரு பெண்ணால் உங்களுக்கு நல்ல பிரயோசன உண்டாகும்.
அம்பு எய்தல் : உங்கள் நோக்கம் நிறைவேறும் , சந்தோஷமும் கிடைக்கும்.
அம்பினால் போர் செய்தல்: உங்கள் ஆயுள் பெருகும், எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள் .
அல்லாஹ்வின் ஒளியை காணுதல்:முஃமினாக இருப்பின் உங்களுக்குச் சந்தோசம் உண்டாகும். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் கௌரவம் பெறுவீர் .அறிஞ் ராக இருந்தால் தூய்மை அடைவீர் .
அல்லாஹ் கணக்கு கேட்பதைக் காணுதல்: நீங்கள் இல்லத்தில் வசிப்பவராயின் , சந்தோஷமும் , ஆனந்தமும் உண்டாகும். உங்கள் பிரயாணம் கஷட்டமின்றி முடிவடைந்து சுகமே இல்லம் திரும்புவீர் .
அரிசி: நீங்கள் பல சங்கடங்களையும் பட்டபின் செல்வத்தையும் அடைவீர் .
அம்மியைக் காணுதல்: சமுதாய மக்களிடையே உங்களுக்குத் தனிச் சிறப்புடைய இடம் கிடைக்கும்.
அம்மியில் தண்ணீர் ஓடுதல்: உங்களுடைய ஆயுளின் முடிவு கால அறிகுறி இது. வெகு சிகிரத்தில் நீங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்து விடுவீர்கள்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!